பேஸ்புக்கின் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தற்போது 2 பில்லியன் பயனர்கள் கொண்டு, ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் கடந்த 2014-ல் வாட்ஸ்அப்பை வாங்கியபோது, வெறும் 500 மில்லியன் பயனர்கள் மட்டுமே கொண்டிருந்தது. இதைத் அடுத்து கடந்த 2016-ல், வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியனை கடந்தது. அதே போல், கடந்த 2018-ல், வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியனாக அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது, உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பயனர்களை கொண்டு, வாட்ஸ்அப் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ தகவலை, பேஸ்புக் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதேபோல், பேஸ்புக் நிறுவனம், 2.5 பில்லியன் பயனர்களையும், இன்ஸ்டாகிராம் 1 பில்லியன் பயனர்களையும் கொண்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப்பில் தரப்பட்டுள்ள என்கிரிப்ட் முறையிலான தரவுப்பரிமாற்றத்தை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என வாட்ஸ்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கேத்கார்ட் தெரிவித்துள்ளார்.